4-4-0-10: ஒரு ரன்னும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 15 வயது ராஜஸ்தான் வீரர்!

ஆகாஷ் செளத்ரி 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்னும் கொடுக்காமல் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்...
4-4-0-10: ஒரு ரன்னும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 15 வயது ராஜஸ்தான் வீரர்!
Updated on
1 min read

ராஜஸ்தானைச் சேர்ந்த 15 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளர், ஒரு சாதனை செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் டிஷா கிரிக்கெட் அகாடமி அணி சார்பாக விளையாடிய ஆகாஷ் செளத்ரி 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்னும் கொடுக்காமல் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

முதலில் விளையாடிய டிஷா கிரிக்கெட் அகாடமி, 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பேர்ல் அகாடமி ஆகாஷ் செளத்ரியின் அட்டகாசமான பந்துவீச்சால் 32 ரன்களுக்குச் சுருண்டது. முதல் மூன்று ஓவர்களிலும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்த ஆகாஷ் செளத்ரி, பிறகு கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலைகுலையச் செய்துள்ளார். கடைசி ஓவரில் அவர் ஹாட்ரிக்கும் எடுத்துள்ளார். 

இதில் முக்கியமான ஒன்று, 10 விக்கெட்டுகளில் ஆறு க்ளீன் போல்ட் மூலமாகவும் இதர நான்கு எல்பிடபிள்யூ மூலமாகவும் கிடைத்துள்ளன. ஸ்டம்புக்கு நேராகப் பந்துவீசி அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஆகாஷ் செளத்ரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com