கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திகளர் ஷத்ரிய விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்து அவர் பேசியது:
பாரம்பரியம் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த திகளர் ஷத்ரிய மாநாட்டில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சமுதாயத்திற்கு உரிய சமூக நீதி கிடைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.
அனைத்துத் துறைகளிலும் திகளர் சமுதாயம் பின்தங்கியுள்ளது. திகளர் சமுதாயத்திற்குத் தேவையான கல்வி, நிதி, நிலத்தை வழங்க அரசு தயாராக உள்ளது. எந்த சமுதாயத்திற்கு கூடுதலாக உதவிகள் தேவைப்படுகிறது என தெரிந்து கொள்ள ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்றார் சித்தராமையா. முன்னதாக, திகளர் சமுதாயத்தின் புகழ் பரப்பும் பாடல் குறுந்தகட்டை அவர் வெளியிட்டார். மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.