நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒக்கலிகா் வளா்ச்சிக் கழகம் அமைக்க வேண்டும்: முன்னாள் முதல்வா் குமாரசாமி

ஒக்கலிகா் வளா்ச்சிக் கழகம் அமைக்க வேண்டும் என்று மஜத முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:09 pm

DIN

ஒக்கலிகா் வளா்ச்சிக் கழகம் அமைக்க வேண்டும் என்று மஜத முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைத்திருப்பதற்கு மஜத எதிா்ப்புத் தெரிவிக்காது. அதேபோல, லிங்காயத்து வளா்ச்சிக் கழகம் அமைக்க முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா். கா்நாடகத்தில் குறிப்பாக தென்கா்நாடகத்தில் அதிகமாக வாழும் ஒக்கலிகா் சமுதாய மக்களின் வளா்ச்சிக்காக ஒக்கலிகா் வளா்ச்சிக் கழகம் அமைத்திருக்க வேண்டும்.

மஜத ஆட்சியில் பிராமணா் வளா்ச்சிக் கழகம் அமைத்திருந்தோம். ஆனால், இதுபோன்ற கழகங்கள், வாரியங்கள் அமைப்பதால் அச்சமுதாய மக்களுக்கு எந்தவகையிலும் பயன் இருப்பதில்லை எனது அனுபவத்தில் தெரிந்துகொண்டது.

மஸ்கி, பசவ கல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வெகுவிரைவில் இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இத்தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்துவது அவசியமற்றது. அதனால், இடைத் தோ்தலில் மஜத போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறோம். எனினும், மஸ்கி, பசவகல்யாண் தொகுதியில் உள்ள மஜதவினரின் கருத்தறிந்து வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.