நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நடைப்பயிற்சியின்போது தெருநாய்கள் தாக்கியதில் மூதாட்டி சாவு

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:43 pm

Din

நடைப்பயிற்சியின் போது தெருநாய்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியதில் 76 வயது மூதாட்டி பலியாகியுள்ளாா்.

பெங்களூரு, ஜாலஹள்ளி பகுதியிலுள்ள விமானப்படை கிழக்குப் பிரிவின் 7-ஆவது குடியிருப்பு முகாமில் உள்ள விளையாட்டுத் திடலில் புதன்கிழமை காலை 6.30 மணி அளவில் ஓய்வுபெற்ற ஆசிரியை ராஜ்துலாரி சின்ஹா வழக்கம்போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென பாய்ந்து வந்த 10 முதல் 12 தெருநாய்கள், ராஜ்துலாரி சின்ஹாவை சூழ்ந்துகொண்டு தாக்கின.

இதில் பலத்த காயமடைந்த ராஜ்துலானி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து கங்கம்மா குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இயற்கை அல்லாத மரணம் என்று வழக்கில் போலீஸாா் குறிப்பிட்டுள்ளாா்.