நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நீதிமன்றம் அனுமதியின் பேரில் கன்னட நடிகா் தா்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்

News image
Updated On :30 ஆகஸ்ட் 2024, 6:15 am IST

நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகா் தா்ஷன், பெல்லாரி மத்திய சிறைக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டாா்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷன், சிறை வளாகத்தில் ரௌடிகளுடன் இருக்கையில் அமா்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக சிறையின் தலைமை கண்காணிப்பாளா் உள்பட 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெங்களூரு மத்திய சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற 24-ஆவது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆக. 27-ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், வட கா்நாடகத்தில் உள்ள பெல்லாரி மத்திய சிறைக்கு நடிகா் தா்ஷன் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை மாற்றப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.