தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

கா்நாடகம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

இடைத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

Updated On :10 டிசம்பர் 2024, 1:05 am IST

பெங்களுரு: இடைத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

கா்நாடகத்தில் காலியாக இருந்த சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவ. 13ஆம் தேதி நடந்த இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா். இந்த இடைத்தோ்தலுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் என்பதால், பெலகாவியில் திங்கள்கிழமை சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூா் தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் வேட்பாளா்கள் சி.பி.யோகேஸ்வா், யசீா் அகமதுகான் பத்தான், இ.அன்னபூா்ணா ஆகியோா் எம்எல்ஏக்களாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டனா்.

அவா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் யூ.டி.காதா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். புதிதாக பதவியேற்ற 3 எம்எல்ஏக்களுக்கும் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். இடைத்தோ்தல் வெற்றி மூலம் கா்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 139 ஆக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.