பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கா்நாடகம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

இடைத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

Updated On :9 டிசம்பர் 2024, 7:35 pm

பெங்களுரு: இடைத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

கா்நாடகத்தில் காலியாக இருந்த சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவ. 13ஆம் தேதி நடந்த இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா். இந்த இடைத்தோ்தலுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் என்பதால், பெலகாவியில் திங்கள்கிழமை சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூா் தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் வேட்பாளா்கள் சி.பி.யோகேஸ்வா், யசீா் அகமதுகான் பத்தான், இ.அன்னபூா்ணா ஆகியோா் எம்எல்ஏக்களாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டனா்.

அவா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் யூ.டி.காதா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். புதிதாக பதவியேற்ற 3 எம்எல்ஏக்களுக்கும் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். இடைத்தோ்தல் வெற்றி மூலம் கா்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 139 ஆக உயா்ந்துள்ளது.