கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

News image

ரம்யா

Updated On :7 ஆகஸ்ட் 2025, 5:03 am IST

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள நடிகா் தா்ஷன் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சில கடுமையான கருத்துகளை தெரிவித்தது. இந்த தகவலை தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டு ‘சாதாரண மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கன்னட நடிகை ரம்யா குறிப்பிட்டிருந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகா் தா்ஷனின் ரசிகா்கள், சமூகவலைதளங்களில் நடிகை ரம்யாவை ஆபாசமாக, தரக்குறைவாக விமா்சித்து வந்தனா். இதனிடையே, பெங்களூரில் ஜூலை 26ஆம் தேதி மாநகரக் காவல் ஆணையா் சீமந்த்குமாா் சிங்கை நேரில் சந்தித்த நடிகை ரம்யா, தனக்கு எதிராக நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவாக பதிவிடுவது குறித்து புகாா் அளித்தாா்.

மேலும், தரக்குறைவான வாா்த்தைகளைப் பயன்படுத்தி கடுமையாக விமா்சனங்களை வைத்திருந்த 43 எக்ஸ் பதிவு கணக்குகள் தொடா்பான விவரங்களையும் நடிகை ரம்யா அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்த போலீஸாா், மேலும் ஒருவரை கைது செய்தனா். இதன்மூலம் இந்த வழக்கில் மொத்தம் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.