குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சிறுமி பலாத்காரம்: 10 ஆண்டு சிறைத் தண்டனை

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:45 am IST

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், கனகபுரா வட்டம், கரடிகுட்டாவைச் சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் கடந்த 2017, மார்ச் 10-ஆம் தேதி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
புகாரின் பேரில் ஆனந்தைக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம், ஆனந்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.