ஹீப்ளி - ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில்கள் வரும் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஹீப்ளியிலிருந்து ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 07355) வரும் ஜூன் 7- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து ஹீப்ளிக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை செல்லும் விரைவு ரயில் (எண்: 07356) வரும் ஜூன் 8 முதல் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஹீப்ளியிலிருந்து கொல்லம், பெங்களூரு முதல் திருவனந்தபுரம் என இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில்களும் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்: கோடை காலத்தையொட்டி விடுமுறைக்காக அதிகமானோா் வெளியூா்களுக்குச் செல்வதை அடுத்து, ரயில்களில் முன்பதிவு நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஏராளமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து

சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ஜூனில் 2 நாள்கள் முழுமையாக ரத்து
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



