சென்னை-திருப்பதி இடையேயான விரைவு ரயில்கள் வரும் ஜூன் 19, 21 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம் நிலைய பணிமனையில் தண்டவாள தொழில்நுட்பப் பணிகள் வரும் 26- ஆம் தேதி முதல் ஜூன் 21- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதையடுத்து, சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சில விரைவு ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி, வரும் ஜூன் 19- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண் 16053) மற்றும் அன்று மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண் 16203) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து வரும் ஜூன் 19 -ஆம் தேதி காலை 6.30 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (எண் 16203), காலை 10.10 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரும் விரைவு ரயில் (எண் 16054) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதியிலிருந்து வரும் ஜூன் 21- ஆம் தேதி காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி விரைவு ரயிலும் (எண் 16054) ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்று மாலையுடன் முடிவுக்கு வரும் தோ்தல் நடைமுறை விதிகள்! 20 ஆயிரம் போ் பணிக்கு முழுமையாக திரும்ப உத்தரவு

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

