சென்னை, ஏப். 18: மும்பை- சென்னை இடையே கோடை கால சிறப்பு விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல் வரும் ஜூன் 7- ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மும்பை சிஎஸ்டி நிலையத்திலிருந்து ஏப். 19 -ஆம் தேதி முதல் ஜூன் 7 -ஆம் தேதி வரையில் அனைத்து நாள்களிலும் அதிகாலை 12.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 01015) அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஏப். 20 -ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூன் 8 -ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 01016) மறுநாள் வரும் 21 மற்றும் ஜூன் 9 -ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மும்பை சிஎஸ்டி நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணம், ரேணிகுண்டா உள்ளிட்ட 24 நிலையங்களில் நின்று செல்லும்.
தொடர்புடையது

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


