சென்னை, ஏப். 18: மும்பை- சென்னை இடையே கோடை கால சிறப்பு விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல் வரும் ஜூன் 7- ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மும்பை சிஎஸ்டி நிலையத்திலிருந்து ஏப். 19 -ஆம் தேதி முதல் ஜூன் 7 -ஆம் தேதி வரையில் அனைத்து நாள்களிலும் அதிகாலை 12.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 01015) அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஏப். 20 -ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூன் 8 -ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 01016) மறுநாள் வரும் 21 மற்றும் ஜூன் 9 -ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மும்பை சிஎஸ்டி நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணம், ரேணிகுண்டா உள்ளிட்ட 24 நிலையங்களில் நின்று செல்லும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து இயக்கப்படும் வடமாநில ரயில் பாதைகள் மாற்றம்

சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ஜூனில் 2 நாள்கள் முழுமையாக ரத்து

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



