சண்டிகரின் மொஹாலி நகரில் அமைந்துள்ள ஒரு அலுவலகத்துக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் கத்தியால் 34 முறை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னும் ஒரு சில நாள்களில், அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாட்டியாலாவைச் சேர்ந்த டிம்பிள் என்பவர், அலுவலகத்தில் தன்னுடைய இருக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஹர்விந்தர் மன் (34) என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் டிம்பிள் உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹர்விந்தர் மன், அதேக் கத்தியால் தன்னுடைய கழுத்துப் பகுதியில் 10 - 11 முறை குத்தியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து டிம்பிள் குடும்பத்தினர் கூறுகையில், டிம்பிளுக்கு குடும்பத்தினரால் பேசி நிச்சயதார்த்தம் முடிந்து இன்னும் ஒரு சில நாள்களில் திருமணம் நடைபெறவிருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.
ஒட்டுமொத்த கொலைச் சம்பவமும் அலுவலகத்துக்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சியில் டிம்பிளின் பின் பக்கமாக வந்த ஹர்விந்தர், கழுத்தில் கத்தியால் குத்துகிறார். பிறகு அவர் எழுந்து ஓடும்போதும் துரத்திச் சென்று கத்தியால் குத்துவது பதிவாகியிருக்கிறது.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. கொலைச் சம்பவம் குறித்து டிம்பிள் பெற்றோர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Summary
Bride stabbed to death 34 times inside office in Mohali!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









