தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

"கூட்டுறவு வங்கிகளின் பயனை தலித் மக்கள் பெற வேண்டும்'

மாநில அளவில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் தலித் மக்கள் பயனடைய வேண்டும் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி. தேவெகெளடா தெரிவித்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:22 am IST

மாநில அளவில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் தலித் மக்கள் பயனடைய வேண்டும் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி. தேவெகெளடா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மைசூரில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் விவிதோத்ஷா சேவா அமைப்பின் சார்பில் நடைபெற்ற 6-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிடைக்கும் பயனை வீர சைவர், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெற்று முன்னேறியுள்ளனர்.
அதேபோன்ற பயனை தலித் மக்களும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். கூட்டுறவு வங்கிகளால் தலித் சமுதாயத்தினர் மட்டுமின்றி மகளிர், மாணவர்கள், விவசாயிகள் பயனடைய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை மாநில அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு வங்கிகளின் பயனை பெரிதளவில் பெற்ற சீனா போன்ற நாடுகள்கூட அதனை மக்களிடத்தில் பரவலாக்குவதில் தோல்வி அடைந்து விட்டன.  ஆனால், இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் மக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன என்றார் அவர். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் துருவநாராயணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.