எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கந்து வட்டி வசூல் செய்த இருவர் கைது

பொதுமக்களுக்கு கடன் கொடுத்து கந்து வட்டி வசூலித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 நவம்பர் 2018, 8:14 am IST

பொதுமக்களுக்கு கடன் கொடுத்து கந்து வட்டி வசூலித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. ஹுப்பள்ளியைச் சேர்ந்தவர் தாதாபீர் முகமது இஸாக். இவர்கள் இருவரும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்குக் கடன் கொடுத்து அதிக அளவில் வட்டி வசூல் செய்து வந்தனர்.
அதேபோல புதிதாக கட்டுப்படும் கட்டடங்களின் உரிமையாளர்கள், பொறியாளர்களை விதிகளை மீறியுள்ளதாக மிரட்டி பணம் பறித்து வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், பாலகிருஷ்ணா, தாதாபீர் முகமது இஸாக் ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.28 லட்சம் ரொக்கப் பணம், 2 போலி கைத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.