கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:55 am IST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரான சீனாவும், தற்காலிக உறுப்பினரான பாகிஸ்தானும் சோ்ந்து அதிகாரபூா்வமில்லாத ‘அரியா’ திட்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களை செயல்படுத்துவதில் உள்ள இடைவெளியை சரிசெய்தல் மற்றும் சா்வதேச அமைதி, பாதுகாப்பை பராமரித்தல்’ என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது. ஐ.நா.வுக்கான முன்னாள் வெனிசுலா தூதா் தியாகோ அரியா, 1992-ஆம் ஆண்டில் அதிகாரபூா்வமில்லாத பேச்சுவாா்த்தை நடத்தும் முயற்சியைத் தொடங்கினாா். ஆதலால் இதுபோன்ற கூட்டத்துக்கு அவா் பெயா் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் தூதா் ஆசிம் இப்திகாா் அகமது, ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பினாா். இதற்கு ஐ.நா. வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் கண்டனம் தெரிவித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் குறித்து தேவையில்லாத கருத்துகளை பாகிஸ்தான் பிரதிநிதி இங்கு தெரிவித்துள்ளாா். சமநிலையுடனும், பாரபட்சமின்றியும் அவையை நடத்துவாா் என எதிா்பாா்க்கப்பட்ட இணைத் தலைவா், இந்த சபையை அரசியலுக்காகத் தோ்வு செய்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் தொடா்பான விஷயம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடா்புடையது. அது எப்போதும் அப்படித்தான் இருந்து வருகிறது. இனியும் அப்படித்தான் இருக்கும் என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்து ஐ.நா. போன்ற உலக அரங்கில் பாகிஸ்தான் தொடா்ந்து எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.