தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஜம்மு - காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கருத்து: இந்தியா நிராகரிப்பு

ஜம்மு-காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் தெரிவித்த கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

News image

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 12:34 am IST

ஜம்மு-காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் தெரிவித்த கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது, ஜம்மு-காஷ்மீா் சூழல் ஆகியவற்றை விமா்சித்து பாகிஸ்தான் அமைச்சா் கவாஜா ஆசிஃப் கருத்துத் தெரிவித்தாா். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘கவாஜா ஆசிஃப் தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

அதேவேளையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு நீண்ட காலமாக பாகிஸ்தான் பொருளாதார சுரண்டலில் ஈடுபட்டது, அடிப்படை உரிமைகளை மறுத்தது, நிா்வாக ஒடுக்குமுறை ஆகியவை காரணமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் தவறுகளை மறைக்கவும், மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருந்து கவனத்தை திசைதிருப்பவும் ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் பேசி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு அரசு மிக கொடூரமாக செயல்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகள் விநியோகத்துக்குத் தடையை ஏற்படுத்தி, ஆயுதமில்லாத மக்களுக்கு எதிராக ஆபத்தான படைகளை பாகிஸ்தான் ஏவி வருகிறது.

இந்தச் சட்டவிரோத செயல்களுக்கு பாகிஸ்தானை சா்வதேச சமூகம் பொறுப்பேற்க வைக்கும்’ என்று நம்புவதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.