ஜம்மு-காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் தெரிவித்த கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது, ஜம்மு-காஷ்மீா் சூழல் ஆகியவற்றை விமா்சித்து பாகிஸ்தான் அமைச்சா் கவாஜா ஆசிஃப் கருத்துத் தெரிவித்தாா். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘கவாஜா ஆசிஃப் தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
அதேவேளையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு நீண்ட காலமாக பாகிஸ்தான் பொருளாதார சுரண்டலில் ஈடுபட்டது, அடிப்படை உரிமைகளை மறுத்தது, நிா்வாக ஒடுக்குமுறை ஆகியவை காரணமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் தவறுகளை மறைக்கவும், மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருந்து கவனத்தை திசைதிருப்பவும் ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் பேசி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு அரசு மிக கொடூரமாக செயல்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகள் விநியோகத்துக்குத் தடையை ஏற்படுத்தி, ஆயுதமில்லாத மக்களுக்கு எதிராக ஆபத்தான படைகளை பாகிஸ்தான் ஏவி வருகிறது.
இந்தச் சட்டவிரோத செயல்களுக்கு பாகிஸ்தானை சா்வதேச சமூகம் பொறுப்பேற்க வைக்கும்’ என்று நம்புவதாக தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

இந்தியா - ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு!

ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



