கோலார் தங்கச்சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 சுரங்கத் தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
1946-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியு தொழிற்சங்கத் தலைவராக இருந்த கே.எஸ்.வாசன் தாக்கப்பட்டதை அறிந்த சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு, ஆண்டரசன்பேட்டை மலையாள மைதானத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் காளியப்பன், சுப்ரமணி, ராமசாமி, சின்னப்பன், கண்ணன், ராமையா ஆகிய 6 தொழிலாளர்கள் குண்டடிபட்டு இறந்தனர். இதன் நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ. 4) கில்பர்டஸ் பகுதியில் உள்ள கே.எஸ். வாசன் சதுக்கத்திலிருந்து, ஊர்வலம் புறப்பட்டது.
ஆண்டரசன் பேட்டை, குப்பம் சாலை வழியாக ரோஜர்ஸ்கேம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் நினைவிடத்தை ஊர்வலம் அடைந்தது. பின்னர் தியாகிகளின் கல்லறைகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் சிஐடியு நிர்வாகிகள் அர்ஜுனன், சீனிவாசன், ஆனந்தராஜ், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் அமைதி ஒப்பந்தம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

ஆர்எஸ்எஸ் பற்றி ஒரு தலித் நபருக்கு ஏன் கவலை? பிரியங்க் கார்கே குறித்து பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு!

நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர்: முன்னாள் இந்திய கேப்டன்

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


