கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

மாநகராட்சி அதிகாரிக்கு மிரட்டல்: ஒப்பந்ததாரர் கைது

பெங்களூரு மாநகராட்சி இணை ஆணையரை மிரட்டியதாக, ஒப்பந்ததாரரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:30 am IST

பெங்களூரு மாநகராட்சி இணை ஆணையரை மிரட்டியதாக, ஒப்பந்ததாரரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஜே.பி.பூங்கா பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கான குத்தகையை ஒப்பந்ததாரர் வெங்கடேஷ் என்பவர் பெற்றுள்ளார்.  இவருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 63.88 லட்சம் பாக்கி தொகை வைத்திருந்ததாம். ஆனால் குப்பையை அள்ளாமல் வெங்கடேஷ் பொய்யான ஆவணங்களை உருவாக்கி பாக்கித் தொகையை கேட்பதாக மாநகராட்சி ஆட்சேபம் தெரிவித்திருந்தது. 
இதையடுத்து,  ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு அண்மையில் 6 பேருடன் சென்ற வெங்கடேஷ், தனக்கு சேர வேண்டிய பாக்கித்தொகையை தருமாறு இணை ஆணையர் எச்.பாலசேகரை மிரட்டினாராம். 
புகாரின்பேரில், ஒப்பந்ததாரர் வெங்கடேஷை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.