திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் சாவு

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:56 am

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கொரட்டுகெரே தொட்டபாலனஹள்ளியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (23). ராயவாராவைச் சேர்ந்தவர் ஹர்ஷத் (24). பெங்களூருவில் பணி செய்து வந்த இவர்கள் இருவரும், சனிக்கிழமை இரவு நண்பரின் திருமணத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொரட்டுகெரேவுக்கு சென்று கொண்டிருந்தனராம். ஊர்டுகெரே கிராஸில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நவீன்குமார், ஹர்ஷத் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. 
இதில் படுகாயமடைந்த நவீன்குமார், ஹர்ஷத் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிக்பள்ளாபூரு மாவட்டம், சிந்தாமணி வட்டம், நந்திகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசேகர் (32) மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொரட்டுகெரே போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.