ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசை நம்ப வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிந்தனையாளர் மன்றத்தின் கலந்தாய்வு கூட்டத்தில் அவர் பேசியது:-
பாஜக மீது மக்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தேக்க நிலையில் இருந்த இந்தியாவில் உண்மையான வேலை நடந்துவருவதால், இதுகுறித்து யாரும் குறை கூறக்கூடாது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை இழக்க மக்கள் தயாராக இல்லை. ராமர் கோயில் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவை மக்கள் தண்டித்துவிடக் கூடாது. ராமர் கோயில் விவகாரத்தை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது.
ராமர் கோயில் கட்டப்படாததால் பாஜகவை தண்டித்துவிடாதீர்கள். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள மத்திய அரசு, ராமர் கோயில் கட்ட உபரிநிலத்தை ஒதுக்க கேட்டுக்கொண்டுள்ளது.
கோயில் கட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டி தேர்தலில் பாஜகவை தோற்கடித்துவிடாதீர்கள் என்றார். இதையடுத்து, பங்கேற்பாளர் ஒருவர், "பாகிஸ்தானில் இருந்த ஒசாமா பின்லேடனை துரத்தி கொன்ற அமெரிக்காவின் நடவடிக்கையை போல புல்வாமாவுக்குப் பதிலடியாக இந்தியாவால் ஏன் செயல்படமுடியவில்லை?" என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்து நிர்மலாசீதாராமன் பேசுகைல்,"புல்வாமா சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி கொடுக்கமுடியாத நிலை, இதுதொடர்பானமக்களின் கோபத்தை நன்றாக உள்வாங்கியுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக பதிவுசெய்துள்ளோம்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சென்னையை வென்ற நாா்த்ஈஸ்ட்!
விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
