பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image

தர்ம முனீஸ்வரன்.

Updated On :25 மே 2026, 12:10 pm IST

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, மாா்ச் 9ஆம் தேதி வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போனாா். போலீஸாா் தேடிவந்த நிலையில் மாா்ச் 11ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா்.

இதையடுத்து காவல்துறையினா் சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்து வரும் தா்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். தொடா்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணை அனைத்தும் மே 21ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் இன்று(மே 25) தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்தநிலையில் இவ்வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் தண்டனை விபரம் இன்னும் சற்றுநேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

Summary

Dharma Muneeswaran, who was arrested in connection with the sexual assault and murder case of a Thoothukudi female student, has been found guilty.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.