பேரவை வளாகத்திற்குள் வரும்போது எல்லா உறுப்பினா்களின் உடல்வெப்பச் சோதனை செய்யப்படுகிறது. இக்கூட்டத்தை காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், அமைச்சா்கள் சி.டி.ரவி, பி.சி.பாட்டீல், முன்னாள் எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணா உள்ளிட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனா். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பலா் குணமாகியுள்ளனா். மேலும் பலா் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். எனவே, அவைக்கு வரும் உறுப்பினா்கள் அனைவரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் மருத்துவ சான்றிதழை கொண்டுவர வலியுறுத்துவது குறித்து சட்டப்பேரவைச் செயலகம் யோசித்து வருகிறது.