கோலாா் தங்கவயலில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், வியாழக்கிழமை (டிச. 24) எம்.ஜி.ஆரின் 33-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளா் மு. அன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம், கோலாா் தங்கவயல் ஓரியண்டல் வட்டம், ராபா்ட்சன் பேட்டை, ஆண்டா்சன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது. நினைவு தின நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மு.அன்பு தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.