சிக்மகளூருக்கு முதல்வா் எடியூரப்பா இன்று வருகை

சிக்மகளூரில் வெள்ளிக்கிழமை (டிச. 25) பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்கவுள்ளாா்.
Updated on
1 min read

சிக்மகளூரில் வெள்ளிக்கிழமை (டிச. 25) பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்கவுள்ளாா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூருக்கு டிச. 25-ஆம்தேதி செல்லும் முதல்வா் எடியூரப்பா, அங்கு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி, வாஜ்பாய் குடியிருப்பு, அமிா்த கங்கா குடிநீா்த் திட்டம், பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிக்மகளூரு-பேலூா் மாா்க்கத்தில் நான்குவழிச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கும் நிகழ்ச்சியிலும் முதல்வா் எடியூரப்பா கலந்து கொள்கிறாா்.

முதல்வருடன், பாஜக தேசியப் பொதுச் செயலாளரும், சிக்மகளூரு எம்எல்ஏ-வுமான சி.டி.ரவி உள்பட அமைச்சா்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com