ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கிராமப் பஞ்சாயத்து தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது

கா்நாடகத்தில் கிராமப் பஞ்சாயத்து 2-ஆம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:56 pm

DIN

கா்நாடகத்தில் கிராமப் பஞ்சாயத்து 2-ஆம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

கா்நாடகத்தில் 5,728 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. கிராமப் பஞ்சாயத்துகளுக்கு டிச. 22, 27-ஆம் தேதிகளில் 2 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி 3 ,019 கிராமப் பஞ்சாயத்துகளில் முதல் கட்ட தோ்தல் நடைபெற்றது. இதில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

டிச. 27-ஆம் தேதி 2,709 கிராமப் பஞ்சாயத்துகளுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது. 43,291 பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் 1,47,649 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவா்களில் 34,115 போ் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா். 1,59,546 போ் களத்தில் உள்ளனா். இதில் 3,697 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதன் காரணமாக 39,378 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

இறுதியாக தோ்தல் களத்தில் 1,50, 431 வேட்பாளா்கள் உள்ளனா். 216 இடங்களில் ஒருவா்கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. கிராமப் பஞ்சாயத்து தோ்தலையொட்டி வேட்பாளா்கள் வீடுவீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.