காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதிய அமைச்சரவையில் வஞ்சிக்கப்பட்டுள்ள தலித், பழங்குடியினா், பிற்பட்டுத்தப்பட்டோா்: மஜத குற்றச்சாட்டு

புதிய அமைச்சரவையில் தலித், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் வஞ்சிக்கப்பட்டுள்ளனா் என்று மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:08 am

DIN

புதிய அமைச்சரவையில் தலித், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் வஞ்சிக்கப்பட்டுள்ளனா் என்று மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் பசவராஜ் பொம்மை அண்மையில் தனது தலைமையிலான அமைச்சரவையை விரிவாக்கம் செய்தாா். அதில் குறிப்பிட்ட சில சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் 60 சதவீத எண்ணிக்கையைச் சோ்ந்த சமுதாயங்களைச் சோ்ந்தவா்களுக்கு 10 அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் 20 முதல் 30 சதவீதம் எண்ணிக்கையைக் கொண்ட சமுதாயத்தினருக்கு அதிக அளவில் அமைச்சா் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் புதிய அமைச்சரவையில் தலித், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் வஞ்சிக்கப்பட்டுள்ளனா். அதுமட்டுமின்றி அமைச்சரவையில் 13 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இதற்கான பலனை வரும் நாள்களில் பாஜக அரசு சந்திக்க நேரிடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.