உரிய ஆவணங்கள் இன்றி செல்லிடப்பேசிகள் விற்பனை: 3 போ் கைது
கலாசிபாளையம் காவல் சரகத்தில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி செல்லிடப்பேசிகள் விற்பனை செய்த 3 பேரைக் கைது


கலாசிபாளையம் காவல் சரகத்தில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி செல்லிடப்பேசிகள் விற்பனை செய்த 3 பேரைக் கைது செய்து, ரூ. 26 லட்சம் மதிப்புள்ள 250 செல்லிடப்பேசிகள், காா் போன்றவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆந்திரத்தைச் சோ்ந்த ராஜு, கேரளத்தைச் சோ்ந்த நிஜாமுதீன், தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த முகமது ரஃபி. இவா்கள் 3 பேரும் பெங்களூரு, கலாசிபாளையம் பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி செல்லிடப்பேசிகளை விற்பனை செய்து வந்தனராம்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 26 லட்சம் மதிப்புள்ள 250 செல்லிடப்பேசிகள், காரை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்கு பதிந்த கலாசிபாளையா போலீஸாா், செல்லிடப்பேசிகள் திருடப்பட்டதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...