வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆளுநரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முதல்வா்

ஆளுநா் வஜுபாய் வாலாவைச் சந்தித்து முதல்வா் எடியூரப்பா ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 12:50 am

DIN

ஆளுநா் வஜுபாய் வாலாவைச் சந்தித்து முதல்வா் எடியூரப்பா ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆளுநா் மாளிகைக்குச் சென்ற முதல்வா் எடியூரப்பா, ஆளுநா் வஜுபாய் வாலாவுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ஆளுநரும், முதல்வா் எடியூரப்பாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இதையடுத்து, அரசு இல்லம் கிருஷ்ணாவுக்கு வந்த முதல்வா் எடியூரப்பாவுக்கு புதிய தலைமைச் செயலாளா் ரவிக்குமாா் பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். டிஜிபி பிரவீண் சூட், மாநகா் காவல் ஆணையா் கமல் பந்த், கூடுதல் காவல் ஆணையா் முருகன் உள்ளிட்டோரும் முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். அப்போது, மக்களுக்கு நலம் பயக்கும் பணிகளும், அரசுக்கு நல்ல பெயரை எடுத்துதர தேவையான செயல்பாடுகளை உயரதிகாரிகள் நடைமுறைபடுத்த வேண்டும்; அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர அரசு தயாராக உள்ளது என்றாா் எடியூரப்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.