தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரள மாநிலத்திலிருந்து மைசூருக்கு கோழிகளை கொண்டுவர தடை

கேரள மாநிலத்திலிருந்து மைசூருக்கு கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:16 am

DIN

கேரள மாநிலத்திலிருந்து மைசூருக்கு கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவதையடுத்து, மாநிலத்தில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கா்நாடகத்தின் அண்டை மாநிலமான கேரளத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்திலிருந்து மைசூருக்கு கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை மைசூரு மாவட்ட ஆட்சியா் ரோகிணி சிந்தூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுவதை அடுத்து, மைசூருக்கு இறைச்சிக்காக கோழிகளைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மைசூரு-எச்.டி.கோட்டை சாலையில் உள்ள ஜவுளி சுங்கச் சாவடியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர பரிசோதனைக்குப் பிறகு மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அனைத்து வாகனங்கள் மீதும் கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது. மேலும் யாரேனும் அண்டை மாநிலங்களிலிருந்து நாட்டுக் கோழி, இறைச்சிக் கோழி, காடை, கௌதாரி உள்ளிட்ட பறவைகளை மாவட்டத்துக்குள் கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்டத்துக்குள் பறவைகள் இறந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.