கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவு

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - படம் - யூடியூப் / Election Commission of India

Updated On :15 மார்ச் 2026, 11:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையொட்டி, தலைநகர் தில்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதில், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், 5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கும் சென்று ஆலோசனை செய்தோம். அரசியல் கட்சி பிரதிநிதிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துகள் பெறப்பட்டன.

Story image

தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர்கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

வெளிப்படையான முறையில் நியாயமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மொத்தம் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி. 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

Story image

8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும். தேனி வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்டவை செய்து தரப்படவுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

அசாம், கேரளம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச். 16-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி மார்ச். 23. வேட்புமனுக்கள் பரிசீலனை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசித் தேதி மார்ச் 26. தேர்தல் நடைமுறைகள் மே 6-க்கு முன் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

Summary

Elections are to be held in a single phase on April 9 for the states of Assam and Kerala, and the Union Territory of Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.