6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏப். 23-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! மே 4 - வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து...

News image
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்- படம் - யூடியூப் / Election Commission of India
Updated On :15 மார்ச் 2026, 10:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்து 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.

இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

வேட்புமனுத் தாக்கல் - மார்ச் 30

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 6

வேட்புமனு பரிசீலனை - ஏப்ரல் 7

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - ஏப்ரல் 9

வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23

வாக்கு எண்ணிக்கை - மே 4

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

5 மாநிலங்களிலும் சேர்த்து 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தேர்தல் பணிகளில் 25 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாடு வாக்குச் சாவடிகள் நிலவரம்

தமிழ்நாட்டில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகள்.

கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகள்.

தமிழ்நாடு வாக்காளர்கள் நிலவரம்

தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி.

பெண் வாக்காளர்கள் 2.89 கோடி.

மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617.

தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.

20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடியாக உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தகுதியான வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் செல்போன்கள் பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்கள் அறிவிக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.