மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் வாக்காளர் பலியானது குறித்து...

News image

அபிஷேக் பானர்ஜி - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:04 pm IST

மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் வாக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

''அமித் ஷா தலைமையிலான மத்திய பாதுகாப்புப் படையினர் தனியார் ராணுவமாகச் செயல்பட்டு வருகின்றனர். உரிமம் பெற்ற குண்டர்கள் குழு ஒன்று மேற்கு வங்க மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

உதயநாராயண்பூர் தொகுதியில் தனது மகனுடன் முதியவர் ஒருவர் வாக்களிக்கச் சென்றுள்ளார். அவரால் நடக்க முடியாது என்பதால், அவரின் மகன் அவருக்கு உதவியுள்ளார். ஆனால் மத்திய பாதுகாப்புப் படையினர் மகனை முட்டித் தள்ளியுள்ளனர். முதியவரும் கீழே விழுந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாதுகாப்புப் படையினர் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. பெண்களை அறைகின்றனர். முதியவர்களை தாக்குகின்றனர். குழந்தைகளிடம் கூட வன்முறை காட்டுகின்றனர். இரக்கமற்ற வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. 2021-ல், அப்பாவி மக்களின் இரத்தத்திற்காக பாஜக பெரும் விலை கொடுத்தது. 2026-இல், அவர்கள் இன்னும் பெரும் விலையைக் கொடுப்பார்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று (ஏப். 29) காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.99 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 91% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.