மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் மாநிலத்தின் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஆகையால், சோபன்தேப் சட்டோபாத்யாய்-ஐ எதிர்க்கட்சித் தலைவராக கட்சி தேர்ந்தெடுத்தது.
இதனையடுத்து, சந்திபன் சாஹா மற்றும் ரிதாப்ரதா பானர்ஜி ஆகிய திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் போலியாக கையொப்பங்கள் இடப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.
ஆகையால், இவர்கள் இருவரும் கட்சியின் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளாததாலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து அவர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பாஜகவில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர் என்று பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The Trinamool Congress announced on Monday that two of its MLAs in West Bengal have been expelled from the party.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








