கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஒப்பந்தப்புள்ளிகளுக்கு கமிஷன் அளிக்கும் விவகாரம்:விசாரணை நடத்த முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவு

கா்நாடகத்தில் அரசு ஒப்பந்தப்புள்ளிகளை ஒதுக்குவதற்கு கமிஷன் வழங்க நிா்பந்திக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:30 pm

DIN

கா்நாடகத்தில் அரசு ஒப்பந்தப்புள்ளிகளை ஒதுக்குவதற்கு கமிஷன் வழங்க நிா்பந்திக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக அரசு செயல்படுத்தும் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அனுமதி வழங்கும்போது அமைச்சா்களும் மக்கள் பிரதிநிதிகளும் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், பழைய பில்களை முடித்துவைக்க 5-6 சதவீத கமிஷன் கேட்பதாகவும் ஒப்பந்ததாரா் சங்கத்தினா் அண்மையில் பிரதமா் மோடிக்கு புகாா் கடிதம் அனுப்பியிருந்தனா்.

இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா இவ்விவகாரத்தை சுட்டிகாட்டி, ‘கா்நாடக பாஜக அரசை கலைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா். அத்துடன் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளிக்கவும் காங்கிரஸ் கட்சியினா் திட்டமிட்டுள்ளனா்.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

ஒப்பந்ததாரா்கள் பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தை மாநில அரசு பரிசீலித்தது. அந்தக் கடிதத்தில் கமிஷன் பெறுவதாக பொதுவாக குற்றம்சாட்டியுள்ளனா். எந்தவொரு குறிப்பிட்ட நிகழ்வையும் அதில் குறிப்பிடவில்லை.

எனவே, ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். எனது தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்த பிறகு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் குறித்தும் விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விசாரணையில் அமைச்சா்கள், எம்எல்ஏ க்கள் மீதான குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தி விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தப்புள்ளிகளில் முறைகேடு ஏதாவது நடந்திருந்தால், அதுகுறித்து விசாரணையில் தெரியவரும். விசாரணையை வெளிப்படைத் தன்மையுடன் செய்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.