சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தேங்காய்ப்பால் ஜாமூன்

தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும். சர்க்கரை, தேங்காய்ப்பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும்.

News image

தேங்காய்ப்பால் ஜாமூன்

Updated On :21 மார்ச் 2026, 10:34 pm

தேவையான பொருள்கள்:

பாசிப்பருப்பு-200 கிராம்

புழுங்கலரிசி - 100 கிராம்

சர்க்கரை -150 கிராம்

தேங்காய்- 1

ஏலக்காய் -4

எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும். சர்க்கரை, தேங்காய்ப்பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும். அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக, மிருதுவாக அரைக்கவும். அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதை தேங்காய்ப் பாலில் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.