மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

முந்திரிப்பருப்புப் பாயசம்

முந்திரிப் பருப்பை நைசாக அரைத்து, விழுதுடன் ஜாரைக் கழுவிய சிறிதளவு தண்ணீரையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

News image
Updated On :28 மார்ச் 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

முந்திரிப்பருப்பு -100 கிராம்

சர்க்கரை 200 கிராம்

கேசரிப் பவுடர் -ஒரு சிட்டிகை

ஏலக்காய் - 5

கிஸ்மிஸ் -10

பால் - 200 மில்லி

நெய் -ஒரு மேஜைக் கரண்டி

செய்முறை:

முந்திரிப் பருப்பை நைசாக அரைத்து, விழுதுடன் ஜாரைக் கழுவிய சிறிதளவு தண்ணீரையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் சர்க்கரை சேர்த்து, கட்டியில்லாமல் கரைத்து, அடி கனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் கீழே இறக்க வேண்டும். வாணலியில் நெய் விட்டு கிஸ்மிஸ் போட்டு வறுத்து இதில் சேர்க்க வேண்டும். ஏலக்காய்ப் பொடி, கேசரிப் பவுடர் கலந்து பாலையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.