ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தேங்காய்த் திரட்டுப் பால்

பொடித்த கருப்பட்டியை 100 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கம்பிப் பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி தனியாக வைக்கவும்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 4:06 am IST

தேவையான பொருள்கள்:

தேங்காய்ப்பால் - ஒரு கிண்ணம்

அரிசி மாவு - 100 கிராம்

பொடித்த கருப்பட்டி - 400 கிராம்

உப்பு - ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி

தண்ணீர் - 350 மில்லி

செய்முறை:

பொடித்த கருப்பட்டியை 100 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கம்பிப் பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் அரிசி மாவு, 250 மில்லி தண்ணீர் மற்றும் அரை கிண்ணம் தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து இக்கலவையைக் கைவிடாமல் கிளறிக் கொதிக்கவிடவும். கலவையானது அல்வா பதத்துக்கு வந்தவுடன் மீதமிருக்கும் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். பிறகு இதனுடன் கருப்பட்டி பாகு, ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான திரட்டு பால் ரெடி.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.