தேவையான பொருள்கள்:
கோதுமை ரவை, சர்க்கரை -தலா 500 கிராம்
தேங்காய்-ஒன்று
நெய் -100 கிராம்
அரிசி மாவு, வறுத்த கசகசா-தலா 50 கிராம்
ஏலக்காய் -5
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கோதுமை ரவை, நெய், அரிசி மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு இறுகலாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கரண்டி நெய், உப்பு இரண்டையும் ஒரு தட்டில் போட்டு, நுரை போல் தேய்த்து மேலே பிசைந்து வைத்திருக்கும் கோதுமை ரவையில் தடவி, பஞ்சு போல நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி சர்க்கரை, வறுத்த கசகசா இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மாவு போல் பிசைந்து ஏலக்காய்த் தூளையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கோதுமை ரவை கலவையில் எலுமிச்சம் பழ அளவு உருண்டை எடுத்து, அப்பளம் போலச் செய்து, வாணலியில் நெய் விட்டு அந்த அப்பளங்களைப் போட்டு எடுத்தவுடன் தேங்காய் கலந்த சர்க்கரை கலவையில் மேல்புறத்தில் சமமாய் தூவ வேண்டும். பிறகு அதை நான்காக மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் இந்த நான்காய் மடித்ததைப் போட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமானவுடன் எடுத்து வைக்க வேண்டும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


