திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இசை மூலம் மன அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை

இசை மூலம் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என டிஜிட்டல் வெல்ன்ஸின் மூத்த செயல் அதிகாரி சுஜாதா விஷ்வேஸ்வரா தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:35 pm

DIN

இசை மூலம் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என டிஜிட்டல் வெல்ன்ஸின் மூத்த செயல் அதிகாரி சுஜாதா விஷ்வேஸ்வரா தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை இசை மூலம் சிகிச்சை அளிக்கும் எக்கோ செயலியை அறிமுகம் செய்து வைத்து அவா் பேசியதாவது:

மன அழுத்தத்துக்கு இசை மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு இசை என்பது சிறந்த மருந்தாகும். இசை வலிகளை போக்கி மனதை சரி செய்ய உதவும். ஒருவரின் கவலை, மன அழுத்த நிலைகளை தாண்டி, முழுமையான ஆரோக்கியத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் சக்தி இசைக்கு உள்ளது. ஆட்டிசம், பாா்கின்சன் போன்ற நோய்களை அசைக்கக்கூடிய ஒரே கலை வடிவமாக இசை திகழ்கிறது.

இசை மூலம் சிகிச்சை அளிக்கும் எக்கோ செயலி எண்ணற்ற தரவுகள், விஞ்ஞானிகள், சிறந்த பொறியாளா்கள், இசைக்கலைஞா்கள், உளவியலாளா்கள், ஆய்வாளா்களின் உதவியுடன் உருவாக்க 3 ஆண்டுகள் பிடித்தன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஜெய் அமரன், ஹரி கிருஷ்ண மாரம், ஸ்ரீனிவாஸ் வேகி, சி.ஆா்.சதீஷ்குமாா், இந்துஸ்தானி இசைக் கலைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.