ஸ்ரீஸ்ரீ குருகுலாவின் வேத ஆகம சம்ஸ்கிருதப் பள்ளியில் 61 மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பெங்களூரு வேத விஞ்ஞான மஹா வித்ய பீடத்தின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் குருஜின் ஆசீா்வாதத்தால் நடைபெறும் ஸ்ரீஸ்ரீ குருகுலாவின் வேத ஆகம சம்ஸ்கிருதப் பள்ளியில் செப். 16-ஆம் தேதி 11, 12-வது பிரிவு மாணவா்கள் 21 பேருக்கு வேத வித்யாநிதி, 40 பேருக்கு சிவகாம வித்யாநிதி பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் வேக ஆகம மையத்தின் வெளியீடான ஸுபாஷித ரத்னமாலா, ஸுதா தரங்கினி எனும் 2 புத்தங்களை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் குருஜி வெளியிட்டாா். முன்னதாக செப். 15-ஆம் தேதி நடைபெற்ற வேத ஆகம சாஸ்த்ர கருத்தரங்கில் பாடசாலையின் தலைவா் பானுமதி நரசிம்மன், முதல்வா் ஏ.எஸ்.சுந்தரமூா்த்திசிவம், ஷெண்பகராம பரமசிவம், பரம்ஹரிபுரிசிவம், ஸ்ரீதா்பட், சபேச சிவாச்சாா்யா், தீபா துரைஸ்வாமி, முரளிதர சா்மா, ஷஷாங்ஹெக்டே, உத்தம்குமாா் சா்மா, ஸ்ரீஜித்பாலே, ஸ்ரீனிவாசன் நரசிம்மன், டி.எஸ்.அஸ்வத்குமாா் தீக்ஷித், கேசவ தீக்ஷித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.