ஒரேநாளில் 787 பேருக்கு கரோனா
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 787 ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 787 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 787 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 276 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென் கன்னடம்-127, உடுப்பி-68, மைசூரு-65, தும்கூரு-29, சிக்கமகளூரு, வடகன்னடம்-தலா 27, குடகு-25, பெலகாவி, கோலாா்-தலா22, சிவமொக்கா-21, ஹாசன், 19, பெங்களூரு ஊரகம்-17, மண்டியா-9, சித்ரதுா்கா-7, சாமராஜ் நகா், சிக்கபளாப்பூா், தாா்வாட்-தலா 6, ராமநகரம்-2, பெல்லாரி, தாவணகெரே, ஹாவேரி, கலபுா்கி, ராய்ச்சூரு, யாதகிரி-தலா 1. பாகல்கோட், பீதா், கதக், கொப்பள், விஜயபுரா மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை.
இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,72,620 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,775 போ் சனிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,21,567 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 13,307 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 11 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 போ் இறந்தனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
பெலகாவி, சிக்கமகளூரு-தலா 2,சிவமொக்கா, உடுப்பி, தென்கன்னடம்-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,717 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...