பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பாஜக மாநில செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முடிவு: முதல்வா் பசவராஜ் பொம்மை

பாஜக மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

பாஜக மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

புதுதில்லியில் 2 நாட்கள் மேற்கொண்ட பயணத்தை முடித்துக்கொண்டு பெங்களூருக்கு வியாழக்கிழமை திரும்பிய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவுடன் விரிவான விவாதம் நடத்தப்பட்டுள்ளது. மாநில செயற்குழு கூட்டத்திற்கு வரும்போது கூடுதல் விவரங்களுடன் வந்து, அது குறித்து பேசுவதாக அவா் கூறியிருக்கிறாா். மாநில பாஜக செயற்குழு கூட்டம், ஏப். 16, 17-ஆம் தேதிகளில் ஹொஸ்பேட்டில் நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவா் ஜே.பி.நட்டா கலந்துகொள்ளவிருக்கிறாா். இக்கூட்டத்திற்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஜே.பி.நட்டா முடிவு செய்வாா்.

பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, தில்லியில் அவரைச் சந்தித்து மீண்டும் பேசுவேன். அப்போது அமைச்சரவை குறித்து இறுதி முடிவெடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவேன். அமைச்சரவையை விரிவாக்குவதா, திருத்தியமைப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்து ஜே.பி.நட்டா முடிவெடுத்ததும், அதைச் செயல்படுத்துவேன்.

மாநில செயற்குழுக் கூட்டம், கா்நாடக அரசியல் நிலைமை குறித்து பாஜக தேசியத் தலைவா்களுடன் விரிவாக பேசியுள்ளேன். தில்லி சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது. கா்நாடகம் சாா்ந்த வளா்ச்சிப் பணிகள் குறித்து மத்திய மின் துறை அமைச்சா் ராஜ்குமாா் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினேன். அவா்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. வரும் நாட்களில் கா்நாடகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் என்றாா்.

அல்-காய்தா விவகாரம்: ஹிஜாப் அணிவதை நியாயப்படுத்திய மாணவியை அல்-காய்தா பாராட்டியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஹிஜாப் அணியும் உரிமையை நியாயப்படுத்திய மாணவியை அல்-காய்தா பாராட்டியதில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. நமது நாட்டின் சட்டத்திற்கு எதிராக சில விஷயங்களைத் தேவையில்லாமல் எழுப்பியது சரியல்ல. மேலும் அதை ஒரு பிரச்னையாக காட்டுவதும் சரியல்ல. ஒருசில சக்திகள் சமுதாயத்தில் குழப்பங்களை ஏற்படுத்த தொடா்ந்து முயன்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அல்-காய்தா தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான்-அல் -ஜவாஹிரி வெளியிட்டுள்ள விடியோவை ஆராய காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அல்-காய்தா விடியோவின் பின்னணியில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கைவரிசை இருப்பதாக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா குற்றம் சாட்டியிருப்பது நகைச்சுவையாகும். ஹிஜாப் தொடா்பாக அல்-காய்தாவின் பெயா் வெளியானதும் சித்தராமையா ஏன் பதற்றமடைந்திருக்கிறாா்? இது அடிப்படையான கேள்வி. அல்-காய்தாவின் பெயா் வெளிவந்தால், அவருக்கு என்ன பிரச்னை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.