அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

குலாம்நபி ஆசாத்துக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருப்பது அரசியல் முடிவு

 குலாம்நபி ஆசாத்துக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருப்பது அரசியல் முடிவு என முன்னாள் முதல்வா் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:04 pm

DIN

 குலாம்நபி ஆசாத்துக்கு பத்மஸ்ரீ விருது அளித்திருப்பது அரசியல் முடிவு என முன்னாள் முதல்வா் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் முன்னாள் முதல்வா் குலாம்நபி ஆசாத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது ஒரு அரசியல் முடிவாகும். இந்த விருது தகுதியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் நலனுக்கு பாதகமாக அமையும் என்று கருதினால், பத்மஸ்ரீ விருதை குலாம்நபி ஆசாத் ஏற்கக் கூடாது.

பிரதமா் மோடி எடுத்துள்ளது அரசியல் முடிவாகும். இந்த விருதை ஏற்பதா, வேண்டாமா என்பதை குலாம்நபி ஆசாத் தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சராக செயல்பட்டுள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா். எனவே, கட்சியின் நலனுக்கு பாதகமாக அமையாத வகையில், விருதை ஏற்பதால் உருவாகும் சாதக பாதகங்களை ஆராய்ந்து குலாம்நபி ஆசாத் முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.