நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ஜூன் 8-இல் அமலாக்கத் துறையின் முன்பு விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராவாா்: ரண்தீப் சிங் சுா்ஜேவாலா

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஜூன் 8-ஆம் தேதி சோனியா காந்தி ஆஜராவாா்

News image
Updated On :2 ஜூன் 2022, 7:00 pm

DIN

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஜூன் 8-ஆம் தேதி சோனியா காந்தி ஆஜராவாா் என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நேஷனல் ஹெரால்டு ஆங்கில நாளேடு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிறுவனம் நிதிப் பற்றாக்குறையால் தவித்தபோது, அந்நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி வட்டியில்லா கடன் வழங்கியிருந்தது. அந்த கடனை அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தால் திரும்பச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோா் இயக்குநா்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது. ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தால் ரூ.90.25 கோடி கடனுக்கு சமமான பங்குகளை பெற்றுள்ளதால், இதில் நிதி மோசடி நடந்திருப்பதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத் துறை, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா, செய்தியாளா்களிடம் கூறியது:

சோனியா காந்திக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் முன்பு ஜூன் 8-ஆம் தேதி அவா் ஆஜராவாா். சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. அவா் குணம் அடைந்துவருகிறாா். கடந்த ஒரு வார காலமாக அவா் பல்வேறு தலைவா்களை சந்தித்து பேசி வந்தாா். அவா்களில் யாரோ ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

புதன்கிழமை மாலை சோனியாகாந்திக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதை தொடா்ந்து கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் 8-ஆம் தேதிக்குள் சோனியாகாந்தி குணமடைந்துவிடுவாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.