புதுவையில் மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட உள்ள நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்று(மார்ச் 20) வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுவையில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 23 கடைசி நாளாகும்.
ஆனால், புதுவையில் திமுக கூட்டணியிலும் சரி, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியிலும் சரி இழுபறி நீடித்து வருகிறது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன.
அதேபோல என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி இறுதியாகாமல் உள்ளது. எனினும் பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் புதுவையில் மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
முதலாவதாக இன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி, புதுவை பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவுடனான இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
CM Rangasamy files nomination papers for 2 constituencies in Puducherry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவையில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!

புதுச்சேரி: மீண்டும் வெல்லுமா என்.ஆர். மாயாஜாலம்?

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது! தொகுதிப் பங்கீடு விவரம்!
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை




