உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

புதுவையில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

புதுவையில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது குறித்து...

News image

புதுவை முதல்வர் ரங்கசாமி. - (கோப்புப் படம்)

Updated On :4 மே 2026, 4:07 pm IST

புதுவை யூனியன் பிரதேசத்தில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களை உள்ளடக்கியது. இங்கு மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இங்கு கடந்த 1964-ஆம் ஆண்டு முதலாவது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தற்போது 15-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

இந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணியில் புதிதாக லட்சிய ஜனநாயகக் கட்சி இணைந்தது. இந்தக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் களத்தில் உள்ளன.

போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் திமுகவை எதிர்த்து 5 தொகுதிகளிலும், விசிகவை எதிர்த்து ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் போட்டியிட்டனர்.

இதைத் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் இரண்டு தொகுதியிலும் தனியாகப் போட்டியிட்டனர்.

மேலும், இத்தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜய்யின் தவெக கட்சி போட்டியிட்டு, 28 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் நேயம் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் தவெக களத்தில் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், மீண்டும் என். ஆர். காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளது.

பிற்பகல் 4 மணி நிலவரப்படி, என்.ஆர். காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் வெற்றியும் 3 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளன.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Summary

The N.R. Congress is set to form the government once again in the Union Territory of Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.