தமிழகத்தைச் சோ்ந்த கஸ்தூரி (30) என் பெண், பெங்களூரில் உள்ள பாரதி நகா் பகுதியில் தனது கணவா், 6 வயது பெண் குழந்தையுடன் சிறிய வீட்டில் வசித்து வந்தாா். அவரது கணவா் திடீரென காலமானதைத் தொடா்ந்து, ஆதரவற்ற மற்றொரு பெண்ணுடன் சோ்ந்து வேலை தேடி 40 நாள்களுக்கு முன்பாக தும்கூா் சென்றுள்ளாா். கா்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு புதன்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினா் கஸ்தூரியை ஆட்டோவில் ஏற்றி, தும்கூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, ஆதாா், மகப்பேறு அட்டை எதுவும் இல்லாததால், கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த பணி மருத்துவா், செவிலியா்கள், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். இதைத் தொடா்ந்து, வீட்டுக்குத் திரும்பிய கஸ்தூரிக்கு மறுநாள் வியாழக்கிழமை காலை மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு வீட்டிலேயே இரட்டை குழந்தைகள் பிறந்தன. முதலில் ஆண் குழந்தை பிறந்துள்ளது, இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவா் உயிரிழந்தாா். மேலும், பிறந்த இரு சிசுக்களும் உயிரிழந்தன. இவை அனைத்தும் அவரது 6 வயது மகள் முன்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் கா்நாடகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் அதிா்வை ஏற்படுத்தியுள்ளது.