இந்திய பங்குச்சந்தை வார இறுதி நாளான இன்று காலை உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று எழுச்சியுடன் தொடங்கிய நிலையில், காலை 10.30 மணி நிலவரப்படி, 885.53 புள்ளிகள் உயர்வுடன் 75,092.77 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
இதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 272.90 புள்ளிகள் உயர்வுடன் 23,275.05 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
சென்செக்ஸில் ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்டவையின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
ரூ. 13 லட்சம் கோடி இழப்பு
வளைகுடா நாடுகளில் உள்ள எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது.
காலை வர்த்தகம் தொடங்கியது முதல் சரிவில் இருந்த பங்குச்சந்தை, மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,496.89 புள்ளிகள் குறைந்து 74,207.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 775.65 புள்ளிகள் குறைந்து 23,002.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
இந்த சரிவினால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இதனிடையே, ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி ராஜிநாமா எதிரொலியாக பங்குச்சந்தையில் ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் சுமார் ரூ. 1 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
After the fall... the stock market has risen!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!

ஜூன் 18: பங்குச்சந்தை 4-ம் நாளாக உயர்வுடன் நிறைவு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 789, நிஃப்டி 277 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




