வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்!

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...

News image
தேசிய பங்குச்சந்தை- ANI
Updated On :10 மார்ச் 2026, 4:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 10) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை தொடக்கத்தில் 425.77 புள்ளிகள் உயர்ந்து 77,991 ஆக வர்த்தகமானது. காலை 10.15 நிலவரப்படி, 77,916.12 புள்ளிகளாக உள்ளது.

இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 162.65 புள்ளிகள் உயர்ந்து 24,190.70 ஆக வர்த்தகமாகி வருகின்றது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைக் கண்டு வந்த நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்ததை தொடர்ந்து சரிவிலிருந்து மீண்டுள்ளது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகளில் டிசிஎஸ், ஐடிசி, எச்சிஎல் டெக், இன்போசிஸ், டெக்எம் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கித் துறைகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.