திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!! காரணம்?

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :9 மார்ச் 2026, 11:44 am IST

இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 9) வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,056.75 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1,840.47 புள்ளிகள் குறைந்து 77,088.66 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. முன்னதாக சென்செக்ஸ் 2,400 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 573.15 புள்ளிகள் குறைந்து 23,877.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் இரண்டும் தலா 2.67 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின்றன.

துறை வாரியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி பங்குகள் சரிந்ததால் நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. நிஃப்டி வங்கி, நிதி சேவைகளும் மோசமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், நிஃப்டி ஐடி பங்குகள் சற்று குறைவாகவே சரிவைச் சந்தித்து வருகின்றன.

பங்குச்சந்தை சரிவு, ஏன்?

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதையடுத்து கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 21 சதவீதம் உயர்ந்து 112 டாலராக உள்ளது. 100 டாலருக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இன்று பங்குச்சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் போர் நடைபெறுவதால் அங்கு முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியவழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள், எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

Summary

Market crash: Sensex sinks 2,400 points, Nifty below 23,750

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.